Thursday, October 19, 2006

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா அற்புதமான நடிகை.வசந்தின் ஒரு படத்தில் கவுதமியின் அம்மாவாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.அப்புறம் அந்த அபூர்வ ராகங்கள் மறக்க முடியாத நடிப்பு.

அமரன் படம் என்று நினைக்கிறேன்,ஒரு பாடல் கூட பாடியிருப்பார்.

மிக நாகரீகமான,குடும்ப பாங்கான பாரம்பர்ய இந்திய அழகு.முக்கியமாக அந்த கண்கள். தீட்சன்யம் என்பதற்கு உதாரனம்.

தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை சுமந்து வாழ்ந்த பெண்.

கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட கண்மூடித்தனமான காதலில் தேடிக்கொண்ட துனையால், தன் வாழ்வில் சந்தித்த துயரங்களை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

கடைசிவரை அவரது கணவர்,அவருக்கு விவாகரத்து தரவில்லை என நினைக்கிறேன்.

ஒரு பெண் எழுத்தாளரிடம் (அனுராதா ரமனன் (அ )சிவசங்கரி (அ )வாசந்தி (அ ) இந்துமதி என நினைக்கிறேன் )....குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டு ஆதங்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன்.

சட்ட சிக்கலில் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்னும் இந்த நாட்டினில்தான் பெண்களுக்கு எத்தனை இன்னல்கள்.
வருத்தத்துடன்,
பா.முரளி தரன்.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.