Tuesday, January 23, 2007

புட்டபர்த்தி சாய்பாபாவும்; கலைஞரும்.

என்னை வாழ்வில் முதல்முறையாக சேவை செய்ய வைத்தது பாபாதான் என்று சொல்வேன். எனது ஊரான நெய்வேலியில் ஒரு சாயி சமிதி இருக்கிறது. ஒவ்வொரு குருவாரமும் அங்கு சாய்பஜன் நடைபெறும்.

மிகச் சிறிய வயதிலேயே அம்மாவுடன் சேர்ந்து சாயிசமிதி செல்லும் பழக்கம் இருந்தது. சாய்பஜனில் பாடப்படும் மங்கள ஹாரத்தி கொடுக்கும் மனநிறைவை வார்த்தைகளில் வர்னிக்க இயலாது.

ஞாயிற்றுக் கிழமைகளில் சாயி சமித்தி தொண்டர்கள் சேர்ந்து, எங்கள் ஊர் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு தேவையான
சிறு சிறு உதவிகள் செய்வோம். அவர்களுக்கு பழம் மற்றும் வேறு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்போம். தனது துன்பங்களை சொல்லி கலங்குபவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லி நம்பிக்கையூட்டுவார்கள், குழுவில் வரும் பெரியவர்கள்.

எங்கள் ஊரில் வேலுடையான்பட்டு முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த திருவிழா கூட்டத்தை கட்டுப் படுத்துவதிலும், வழிகாட்டவும் காவல் துறைக்கு உதவி செய்வோம்.

முட்புதர்களை அகற்றுவது, தண்ணீர்ப் பந்தல் அமைத்து அன்னதானம் செய்வது போன்ற பனிகளில் ஈடுபடுவோம். எனது அம்மா ஒரு சாயி பக்தை.வீட்டில் கடைக்குட்டி ஆதலால் நான் எப்போதும் அம்மாவோடே ஒட்டிக்கொண்டிருப்பேன். அதனால் கிடைத்த அனுபவங்கள் இவை.

எனது பள்ளி நாட்களில், எங்கள் ஊருக்கு ஒருமுறை சாயிபாபா வந்திருந்தார். நாங்கள் குழந்தைகள் எல்லாம் வெள்ளை உடுப்பு அணிந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தோம். எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு பக்தருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்தார் பாபா.அதில் ஒரு துளி எனது நெற்றியிலும் ஏறியது.

அண்ணாவும், அக்காவும் ஸ்லோகங்கள் சொல்லி பரிசு வாங்கியிருக்கிறார்கள்.
சாயி சமிதியில் சிறுவர்களுக்கு ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.மேலும் ஒரு சிறப்பான விஷயம் அங்கு உள்ள மத நல்லினக்க சூழ்நிலை. அனைத்து மதச் சின்னங்களும் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதனாலோ என்னவோ தெரியவில்லை, சிறு வயதில் வேற்றுமத நண்பர்களோடு சேர்ந்து சர்வ சாதாரனமாக மசூதி மற்றும் சர்ச் என்றெல்லாம் சுற்றி வருவேன்.


சாயிசமிதியின் சார்பாக இலவச மருத்துவ முகாம்கள் பல நடத்தப்படும்.
அதில் கலந்துகொண்டு பெரியவர்கள் சொல்லும் சிறு பணிவிடைகளை
செய்வோம்.

எனது அனுபவங்கள் இந்த அளவில் இருக்க, எனது மனைவி வீட்டு உறுப்பினர்கள் அதி தீவிர சாயி பக்தர்கள். எனது மாமியார் தொண்டு தொண்டு என சாயியின் பெயரால் ஊருக்கு உழைப்பவர்.

எனது மனைவியின் வாழ்வில் சாய்பாபா நிகழ்த்திய ஒரு சிறிய அதிசயம். எனது மனைவி கறுவுற்றிருப்பதை சாயிபாபா, அவளின் கனவில் வந்து உணர்த்தி அதை அவளது தாயாரிடம் (அதி தீவிர சாயி பக்தையான எனது மாமியாரிடம் ) தெரியப்படுத்தச் சொன்னார். அதனால்
எனது மகனுக்கு சாய்ராம் என்றொரு பெயரும் உண்டு.எனது சித்தப்பா
வீட்டில் இருந்த சாயி புகைப்படத்தில் இருந்து விபூதி பல நாட்களுக்கு கொட்டிக்கொண்டிருந்த அதிசயமும் நடந்துள்ளது.

ஆந்திராவில் ஏதோ ஒரு வறண்ட பகுதியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மஹாசக்தியானது, தனது அமைதியான அன்பு, தொண்டு மற்றும் சத்திய போதனையால், தமிழகத்தில் இருந்த என்னிடம் ஒரு நல்வித்தை விதைப்பதும், நம்பிக்கையை வலுப்படுத்துவதும் போன்ற செயல்களெல்லாம் தன்னலமில்லாத
ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். அதனால்தான் சொல்கிறார்களோ
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு" என்று.

கலைஞருக்கு நன்றி தெரிவித்து முன்பே ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்திருந்தேன், வேலையிலா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை அறிவித்தபொழுது. தொகை சிறியதாக இருந்தாலும், வேலைக்காக ஒரு விண்ணப்பம் அனுப்பவாவது அந்த தொகை உதவும். நானெல்லாம் ஒரு அப்ளிகேஷன் அனுப்ப பணம் இல்லாமல் அவதிப்பட்டவன். நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தும், பிரயானம் செய்ய காசு இல்லாததால் இந்திய விமானப் படை வேலையை தவற விட்டவன். எனவே வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவியின் மகத்துவம் எனக்கு பெரிதாக தெரிகிறது. நமது வரிப்பணம்தான், இருந்தாலும் சரியான விஷயத்திற்கு அளிக்கப்பட்டதால், பல பேர் வாழ்வில் ஒளியேற்றும்.

எம்பத்திரண்டு வயதுவரை நாத்திகக் கொள்கையில் ஊறியவருக்கு
வலிய சென்று பாபா ஆசி வழங்கி உள்ளார், என்ன ஒரு பாக்கியம் பாருங்கள். தான் நாத்திகவாதியாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களின் ஆத்திக கொள்கைக்கு மதிப்பளிப்பது என்பது எவ்வளவு பெரிய பக்குவம். அந்த பக்குவத்திற்கும், தெளிவிற்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த வலிய தேடிச் சென்ற ஆசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் துறவிகளிடமும், ஞானிகளிடமும் பாகுபாடு என்பதே கிடையாது
என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு சாட்சியாகிவிட்டது.

அறம் என்பதை தமது வாழ்க்கையின் செய்தியாக உலகிற்கு கொடுக்கும் துறவிகளும், ஞானிகளும்தான் பாரதத்தின் உண்மையான அடையாளம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, January 20, 2007

வெல்டிங் மெஷினால் தீ விபத்தா?.

துபாயில் ஒரு பல மாடிக்கட்டிட வேலையில் தீ பிடித்ததில், இந்தியர்கள் உட்பட பல தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளார்கள். தீ விபத்துக்கான காரணமாக ஒரு வெல்டிங் மெஷினை சொல்லியிருக்கிறார்கள்.

எனது துறை சார்ந்த அறிவின் அடிப்படையில், இதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஒரு வெல்டிங் மெஷினில், இந்த அளவிற்கு ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கான பாகங்கள் எதுவும் கிடையாது. அதுவும் அரபு நாடுகளில் உபயோகப் படுத்தப்படும் மெஷின்கள், நவீன தொழில் நுட்பம்
கொண்டவை.

பெரும்பாலும் இது போன்ற உயரமான கட்டிட வேலைகளில், மிகக் குறைந்த எடையில் ஆன, பெரும்பாலும் எலக்ட்ரானிக் பாகங்கள் கொண்ட மெஷினைத்தான் உபயோகப் படுத்துவார்கள்.
இவைதான் கையாள்வதற்கு மிக எளிதானவை.

இந்தியாவில் ட்ரான்ஸ்பார்மர் டைப் மெஷின்கள், சிறிய பட்டறைகளில் இப்பொழுதும் புழக்கத்தில் உள்ளது. அது போன்ற வெல்டிங் மெஷின்கள் இங்கு கிடையாது.

ஒரு வேளை டீசலை உபயோகிப்படுத்தி செயல்படும் ஜெனரேட்டர் வகை மெஷின்களாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டீசல் டேங்க் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

வெல்டிங்கில், கேஸ் வெல்டிங் என்றொரு வகை உண்டு. இதில் ஆக்சிஜன், அசிட்லின் வாயுக்களின் உதவியால் வெல்டிங் செய்யப்படும். அப்படி ஒரு வெல்டிங் முறையை தேர்வு செய்திருந்தால், அந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையிலேயும் சிலிண்டர் வெடிக்க வாய்ப்புகள் கோடியில் ஒன்றுதான்.

எப்படி யோசித்தாலும் வெல்டிங் மெஷினால் ஏற்பட்ட தீ என்பது குழப்பம் ஏற்படுத்துவதாவே உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியானபடி இருந்ததா என தெரியவில்லை. அதிக விவரங்கள் கிடைக்கும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதில் இறந்துபோன இந்தியர் ஒருவர் வேலைக்கு புதிதாய் சேர்ந்திருந்தாராம்.
என்ன கொடுமை பாருங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு நம்மை ஆளும் அரசியல்வாதிகள் கையில் இருப்பதுதான் அதைவிடக் கொடுமை.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Friday, January 12, 2007

இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா?.

ஒரு முன் அறிவிப்பு. இது குழலியோட கதைக்கு பதில் கதையாக இருந்தாலும் என்னோட சொந்தக் கதை.

பாண்டிச்சேரி.

முரளி என்ன இது? இப்படி அடம் பன்ற?. இன்னிக்கு நாடு உள்ள நிலைமைய புரிஞ்சிக்கோ. கிடைக்காதுன்னு தெரிஞ்சுப் போனதக்கப்பறம் உன்னை வருத்திக்கிறதுல என்ன லாபம்?.மறந்துடு நடந்தது அத்தனையும் மறந்துடு.

டேய் எப்படிடா மறக்க முடியும். நான் அவள எவ்வளவு காதலிச்சன்னு
உங்களுக்கும் தெரியும்தானடா?. லவ் லெட்டர எங்க... எப்படி? குடுக்கலாம்னு ஐடியாவெல்லாம் குடுத்திங்களேடா?.

ஒற்றைப் பார்வையில் மனம் பறித்தாய்; தலை தாழ்ந்தேன்,
மற்றோர் பார்வைக்கு உயிர் தாங்காது.
வற்றல் பார்வைகள் பல உண்டு ஊரினிலே;
வற்றாத புன்னகையை கண்டுகொண்டேன்;உன் கண்களிலே,
காதல் கொண்டேன்.
இந்த கவிதையை படித்த நண்பர்கள் குழு,
மச்சான் இதையே எழுதி குடுடா. நிச்சயம் உம் மனச நிச்சயமா அவ
புரிஞ்சுப்பாடா என்றும் உசுப்பேற்றியிருந்தது.

என் இதயம் கவர்ந்த அந்தக் கள்ளி, அலுவலகத்தில் என் கூடவே வேலை செய்பவள்தான். நாங்கள் இருவருமே இஞ்சினியர்கள். அவள் R&D துறையில் ENGINEER, நான் SERVICE ENGINEER. எனக்கு அலுவல் விஷயமாக ஊர் உலகமெல்லாம் சுற்றி வரும் வேலை. அலுவலகம் வருவதே மாசம் ஒரு வாரம் அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு வாரம். அப்படி ஒரு நீண்ட
வட இந்திய பயனத்தை முடித்துவிட்டு திரும்பிய ஒரு நாளில், லஞ்ச் டேபிலில் என் தேவதையைக் கண்டேன்.

கண்டதும் காதல்; காதல் கொண்டதும் கவிதை.
நிலவின் கருப்பு; அவள் முகத்து மச்சம்; இரண்டுமே அழகுதான்.

அம்மா வானத்து நிலா காட்டி சோறு ஊட்டியிருக்கிறாள் ஆனால்
பூமியில் உலவிய என் நிலா எனக்கு சோறு உன்ன வேண்டும் என்பதையே மறக்கடித்தாள்.

SERVICE ENGINEER க்கு எல்லாம் எங்கள் அலுவலகத்தில் நேர ஒழுங்கு கிடையாது...... அவங்கள விட்ருங்கப்பா, மாசத்துக்கு ஒரு வாரம்தான் ஆபிஸ் வரானுங்க, எதையும் கண்டுக்காதீங்க என்று ஒரு உத்தரவே இருந்தது எங்கள் அலுவலகத்தில்........ அடுத்த பிராயனத்துக்கான ஆயத்தங்களை முடித்த பின், புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன் நான்.கனையாழி, புதிய ஜனனாயகம், ரீடர்ஸ் டைஜஸ்ட், மற்றும் எனது துறை சார்ந்த புத்தகங்களால் எனது அலுவலக டேபில் நிறைந்திருக்கும்.
எனது தேவதையின் கைப்படும் பாக்கியத்தையும் எனது புத்தகங்கள்
பெற்றன.

அவள் குடித்துவிட்டு மிச்சம் வைத்துவிட்டு சென்ற மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து திருட்டுத்தனமாக அனைத்துக்கொண்டிருந்த நாளில் எனது காதல் அலுவலக நண்பர்களிடம் குட்டுப்பட்டது.

ஐயரே, பொண்ணு வெள்ளையா இருக்குன்ன உடனே உங்க ஆளா இருக்கும்னு நினைச்சிட்டியா. அடக்கமா இரு மகனே இல்லன்னா அடி படுவ. அவங்கள்ளாம் அருவா, பெட்ரோல் குண்டு, உருட்டு கட்டன்னு
சுத்தர பார்ட்டி ஆளுங்க.. என்ற நண்பர்களிடம், தெரியும் போங்கடா, எறா, புறா, சுறா எல்லாத்தையுமே என் ஆளு முழுங்கும்போதே அத தெரிஞ்சிக்கிட்டேன் என்றேன். கூடவே ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் அவளுடைய பெரியப்பா மகள் கலைச்செல்விஅக்கா திருமணம் செய்து, அவர்கள் வீட்டு அத்திம்பேர் ஆனது ஒரு ஐயர்தான் என்பது மேலும் நம்பிக்கை தந்திருந்தது.

நாட்கள் நகர்ந்தது, அவளும் என்னிடம் காதல் கொண்டிருக்கிறாள் என மனம் உணர ஆரம்பித்தது.ஆனால் யாரோ ஒருவர் முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டுமே.

காதல் உச்சத்தில் இருந்த, நாளும் கோளும் நல்ல நிலையில் இருந்த ஒரு நன்நாளில் எனது காதல் கடிதத்தை அவளது கைப்பையில் வைத்துவிட்டு (ஒரு வேளை என்னை காதலிக்கவில்லை என்று முகத்துக்கு நேராகவே
சொல்லிவிட்டால் அதை தாங்கமுடியாது என்பதால்) மறு நாள் அவளின் பதிலுக்காகவும், வருகைக்காகவும் படபடப்பாக காத்திருந்தேன்.

அதன் பிறகு, வெகு நாள்வரை அவளை பார்க்கவே முடியவில்லை.
அடக்கம் உனது இயல்பாய் இருந்தது,
அன்பு உனது ஆடையாய் இருந்தது,
புன்னகை உனது அணிகலனாய் இருந்தது,
அறிவு உனது பேச்சாய் இருந்தது.
மனம் மட்டும் வெறும் கல்லாய் இருந்ததோ?
என்று காதல் பித்துகொண்டு
அலைந்து தவித்தேன். முடிவாக அவளைத் தேடி அவளின் சொந்த
ஊரான திண்டிவனத்திற்கு சென்றேன்.

என்னை யார் என்றே தெரியாது என்றாள்...... செத்தாலும் ஒரு முடிவு தெரியாமல் நகருவதில்லை என்று பிடிவாதமாக நான் அவள் வீட்டை விட்டு நகராமல் நின்றதும், அவள் தந்தை வரும் முன் அங்கிருந்து போய்விடுமாறு கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு
கேட்டுக்கொண்டாள். அவள் கண்ணீர் என்னை அங்கிருந்து நகர வைத்தது.

அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் என்னைச் சந்தித்து பேசினார். முரளி அவங்க அப்பா திண்டிவனத்துல வலுவா இருக்கிற ஒரு பார்ட்டில முக்கியமான ஆளு,
அவரு லாயரும் கூட...... உனக்கே தெரியும்... ஜாதி இல்ல இல்லன்னு ஒப்பாரி வப்பாங்க ஆனா அந்த கட்சியே ஒரு குறிப்பிட்ட சாதிக்கோசரமே உருவான கட்சி.

கட்சி உருவான ஆரம்ப நாட்களில், குச்சி கொளுத்தறதுங்கற பேர்ல எத்தன தலித்து குடிசங்கள கொளுத்துனாங்கன்னு ஊருக்கே தெரியும்.
இப்ப தலித்துங்க ஒரு வலுவான ஓட்டு வங்கியா மாறிட்டதால அண்ணன் தம்பி ஆகிட்டாங்க. ஆனா மாமன் மச்சானா என்னிக்குமே மாற மாட்டாங்க.பலமான ஓட்டு வங்கியா இருக்கிற தலித்துங்களுக்கே இந்த நிலமைன்னா ? ஓட்டு வங்கியா இல்லாத ஐயருங்கல்லாம் அவங்க வீட்டு மாப்பள்ளையா ஆகனும்னு நினைச்சா!! அது முடியுற காரியமா?? யோசிச்சுப் பாரு.

அப்பறம் அந்தப்புள்ள உன்கிட்ட சொல்ல சொல்லிச்சு. நீ அது மேல அன்பு வச்சது நிசம்னா, நீ நல்லாயிருக்க அப்படிங்கரத, அந்த புள்ள, அதோட வாழ்க்கை முழுக்க கேட்டுகிட்டே இருக்கர மாதிரி உன்ன வாழ்ந்து காட்ட சொல்லிச்சு. இந்த வார்த்தைய அது மேல சத்தியம்பன்னி சொல்ல சொல்லிச்சு.

நான் ஏன் இத்தனை சொல்றேன்னு நீ நினைக்கலாம். பொண்ணு வேற
சாதியில, அதுவும் ஒரு பார்ப்பான கல்யாணம் பன்னிக்கிச்சுன்னா
தன்னோட கட்சியில தனக்கு மரியாத போயிடும்னு நினைச்சு அவங்க அப்பா சொந்தத்துல ஒரு பையனுக்கு நேத்து காலையிலேயே
கல்யாணம் முடிச்சிட்டார்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.




மூந,முக,முச.

அன்பு தமிழ் நெஞ்சங்களே, இந்தப் பதிவை ஒரு கற்பனை என நீங்கள் எடுத்துக்கொண்டால், அதில் எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால்
இதில் பொதிந்துள்ள சில வரலாற்று உண்மைகளை நீங்கள் மறுக்க
மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

முதலாவது மூந என்ற மூன்று நண்பர்களை அறிவோம்.

1. ராஜாஜி - குலக்கல்வி திட்டம் கொண்டு வர முயன்றார். ஹிந்தியும் கற்றால் தவறில்லை என்றார். ஆச்சார சீலர். கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் பகவான் ஸ்ரீராமரின் கதையை எழுதினார்.

2. திரு.வி.க - சமஸ்கிருதம், அரபி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றார். தமிழை அதைவிடச் சிறப்பாக கற்க வேண்டும் என்றார். தமிழர்கள் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும் என விரும்பினார். சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற காவியங்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றார். பெண்மையை சிறப்பித்தார். அறநெறி தவறாது வாழ்ந்தார்.

3. ஈ.வெ.ரா.- தமிழை பழித்தார். நீ தமிழன் அல்ல திராவிடன் என பிரிவினைவாதத்தை விதைத்தார். பெண்களுக்கு கற்பு அவசியமன்று என்றார். சிலப்பதிகாரம், இராமயணம் போன்ற இலக்கியங்களை பழித்தார்.
அறநெறி தவறிய வாழ்வால் நோய்கள் பல கொண்டு வாழ்ந்தார்.

இந்த மூன்று நண்பர்களும் தங்களுக்குள் இரகசியமாய் பேசி வைத்துக்கொண்டு இப்படி வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்தனரோ என நினைக்க தோன்றுகிறது.

ஆனால் ஈ.வே.ரா-க்கு தன் நிலைப்பாடு எத்தகைய அபாயம் நிறைந்தது என்பது புரிந்தே இருந்திருக்கவேண்டும். அதனால் இந்த கட்சி தி.க தன்னோடே அழிந்து போகவேண்டும் என அவர் விரும்பினார்.

அதனால்தான் அவர் காலத்திலேயே முன்னேற்ற கழகங்கள் (முக)
முளைத்தனவோ என்னவோ?.

ஆனால் தமிழர்கள் ஜனத்தொகையில் அரை சதமே உள்ள கொலைவெறி பிடித்த, சில நாத்திக திருடர்கள், சில சுயலாபங்களுக்காக விடாமல் கருப்பை
பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.

ஈ.வே.ரா தன் காலத்தில் நிலைப்படுத்திய ஆனவத்தின் அடையாளமான கறுப்பு சிந்தனைகள், தமிழர்களை பிரிவினைவாதம், தீவிரவாதம், நாத்திகவாதம் என்ற முச்சந்தியில்தான் (முச) நிறுத்தியிருக்கிறது.

இருட்டான இந்த கறுப்பு முச்சந்தியில் இருந்து வெளியேற தமிழ் பேசும் சமூகம் கைக்கொள்ளவேண்டியது இருட்டை விரட்டும், ஞானவெளிச்சத்தை பரப்பும், அரோக்கியம் தரும்
ஆத்திகம் என்னும் மஞ்சள் ஒளி.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, January 02, 2007

நாத்(திக)ரின் ஆத்திரமும், ஆத்(தீ)கரின்......

குமுதம் இதழில் நாத்திக கி.வீ ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கலைஞர் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாதே என்பதால் அவர்களின் ஆத்திரத்தை அடக்கிகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு நடத்திய வன்முறையிலேயே, பெட்ரோல் குண்டுவரை போயிருக்கிறார்கள் என்றால், ஆத்திரம் கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் வேறென்னென்ன செய்வார்களோ என்ற அச்சம் மேலிடுகிறது.

வன்முறையில் ஈடுபட்டது திக அல்ல பெதிக என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். திக என்னும் தறுதலை பெற்று திரியவிட்டுள்ள தத்தாரி குழந்தைதானே பெதிக.

தமிழகத்தில், நாத்திகம் என்ற பெயரில் திராவிடப் பேரினவாதத்தை விதைத்துள்ள திக, ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சனையை சிங்களப் பேரினவாதம் என்று வர்னித்து, மறைமுகமாக புலிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கிவீ ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தமிழகத்தில் ஆத்திகர்கள் மேல் வன்முறையை ஏவ நினைத்தால், அந்த வன்முறை, வன்முறையாலேயே எதிர்கொள்ளப்படும் நிலைமை உருவாகலாம்.

அப்படி ஒரு முடிவை ஆத்திகர்கள் எடுத்துவிட்டால், தமிழக ஜனத்தொகையில் அரை சதம் கூட இல்லாத நாத்திகர்களை எதிர்கொள்ள ஆத்திகர்களுக்கு பெட்ரோல் குண்டு எதுவும் தேவையில்லை பின் வரும் சொல்லாடல் வழி நடந்தாலே போதுமானது.

"ஆத்திரத்தை அடக்கினாலும்,அடக்கலாம்_________அடக்க முடியாது".

நினைத்துப் பாருங்கள், ஸ்ரீரங்கத்திற்கு வைகுண்ட ஏகாதசிக்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீங்கள், இரவோடு இரவாக, திருட்டுத்தனமாக நட்ட வெறும் கல்லுக்கருகில் இப்படி ஒரு எதிர்ப்பை காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று?.

"அறிவால் விடையளிக்க முடியாதபோதுதான் நம்பிக்கை துளிர்க்கிறது" என்ற உண்மை நீங்கள் உணர வேண்டிய ஒன்று.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.