Tuesday, January 02, 2007

நாத்(திக)ரின் ஆத்திரமும், ஆத்(தீ)கரின்......

குமுதம் இதழில் நாத்திக கி.வீ ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கலைஞர் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாதே என்பதால் அவர்களின் ஆத்திரத்தை அடக்கிகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு நடத்திய வன்முறையிலேயே, பெட்ரோல் குண்டுவரை போயிருக்கிறார்கள் என்றால், ஆத்திரம் கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் வேறென்னென்ன செய்வார்களோ என்ற அச்சம் மேலிடுகிறது.

வன்முறையில் ஈடுபட்டது திக அல்ல பெதிக என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். திக என்னும் தறுதலை பெற்று திரியவிட்டுள்ள தத்தாரி குழந்தைதானே பெதிக.

தமிழகத்தில், நாத்திகம் என்ற பெயரில் திராவிடப் பேரினவாதத்தை விதைத்துள்ள திக, ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சனையை சிங்களப் பேரினவாதம் என்று வர்னித்து, மறைமுகமாக புலிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கிவீ ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தமிழகத்தில் ஆத்திகர்கள் மேல் வன்முறையை ஏவ நினைத்தால், அந்த வன்முறை, வன்முறையாலேயே எதிர்கொள்ளப்படும் நிலைமை உருவாகலாம்.

அப்படி ஒரு முடிவை ஆத்திகர்கள் எடுத்துவிட்டால், தமிழக ஜனத்தொகையில் அரை சதம் கூட இல்லாத நாத்திகர்களை எதிர்கொள்ள ஆத்திகர்களுக்கு பெட்ரோல் குண்டு எதுவும் தேவையில்லை பின் வரும் சொல்லாடல் வழி நடந்தாலே போதுமானது.

"ஆத்திரத்தை அடக்கினாலும்,அடக்கலாம்_________அடக்க முடியாது".

நினைத்துப் பாருங்கள், ஸ்ரீரங்கத்திற்கு வைகுண்ட ஏகாதசிக்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீங்கள், இரவோடு இரவாக, திருட்டுத்தனமாக நட்ட வெறும் கல்லுக்கருகில் இப்படி ஒரு எதிர்ப்பை காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று?.

"அறிவால் விடையளிக்க முடியாதபோதுதான் நம்பிக்கை துளிர்க்கிறது" என்ற உண்மை நீங்கள் உணர வேண்டிய ஒன்று.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

1 comment:

Anonymous said...

கலக்கல்......