Friday, December 29, 2006

கனிமொழி.

சமீப காலமாக, பத்திரிக்கைகளில் அதிக அளவில் தென்படுகிறார், கனிமொழி அவர்கள். ஈழப் பிரச்சனை, கவிதை, நீதி மன்றங்களில் தமிழ் மொழி, கருத்து இணைய தளம் என்று ஏதோவொரு செய்தி , அவர் பெயரும் படமும் தாங்கி, வந்தவன்னம் உள்ளது.

இவையெல்லாம், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆவலை என்னுள் உருவாக்கி உள்ளது. நான் அறிந்தவரையில், அவர் ஹிந்து நாளேட்டில் சிறிது காலம் பனியாற்றினார் என நினைக்கிறேன். கவிதாயினி என்று தெரியும், ஆனால் அவரது கவிதைகளை படித்ததில்லை. அவரது வேறு முகங்கள் எனக்குத் தெரியாது.

ஆனால், முக்கியமாக நான் சொல்ல வருவது யாதெனில், அவருடைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது, ஒரு வசீகரம் தெரிகிறது. முன்னாள் முதல்வர் திரு.ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை பார்க்கும்பொழுதும் எனக்கு இவ்வாறு தோன்றியுள்ளது.

கனிமொழி அவர்கள், பெண்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கனிமொழி அவர்கள், அப்படி ஒரு இயக்கம் தொடங்கினால், அவரது வசீகரத்தால் நிச்சயமாக மிகப் பெரும்பான்மையான
பெண்கள் கவரப்படுவார்கள் என்பது நிச்சயம்.

அதனால், ஜெயலலிதாவிற்கு பெண்களிடம் இருக்கும் ஆதரவில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டு, தி.மு.க விற்கு சற்றே பலம் கூட வாய்ப்புள்ளது என்பது இந்த பாமரனின் எண்ணம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: