Monday, May 07, 2007

தமிழர்களின் அடையாளமாகிப்போன புலிகள்-பாகம் 1.

தமிழகம், தமிழர்கள் என்றால் எவையெல்லாம் ஞாபகம் வருகிறது?. காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளமா?. காதலிப்பவர்களை கண்டால், பிரித்துப் போடத்தான் தமிழ் சமூகம் முயற்சிக்கிறது. வக்கிரம் காதலாக உருவகப் படுத்தப்படுகிறது. பொறுக்கித்தனம் வீரமாக உருவகப் படுத்தப்படுகிறது.
சரி, நடைமுறையில் எவையெல்லாம் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது.

1. தமிழகத்தின் திருக்கோவில்கள். கட்டட, சிற்ப கலைகள்.
2. தமிழ் செம்மொழி, மற்றும் அதன் இலக்கிய வளம்.
3. இட்லி, வடை, சாம்பார்.
4. தீபாவளி, பொங்கல் பண்டிகைகள்.
5.ஞானிகள், மற்றும் ஞான மொழிகள்.
6. இசை, சங்கீதம், நாட்டியம்.
7. ஆங்கில அறிவு. கல்வி அறிவு.
8. கூந்தலில் பூ சுமக்கும் பெண்கள்.
9. இன, மொழி, ஜாதி வெறி அரசியல் வியாதிகள்.
10. சினிமா மோகம். கட் அவுட், போஸ்டர்.
இப்படியே பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று ஒரு சம்பவம்..........ம்ம்ம், நேரமாகிவிட்டது, மீதி அடுத்த பதிவில்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.