Friday, December 29, 2006

மருத்துவர்; ஐயாவா? புடிங்கியா?

நமது சமூகத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்வில் முக்கியமானவற்றை வகைப்படுத்திச் சொல்வார்கள்.எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இந்த வரிசையில் மருத்துவரை ஏன் சேர்க்கவில்லை? என்பதுதான் அது.

தமிழ் சினிமாவில்,....... டாக்டர் உசுர காப்பாத்தி குடுத்திட்டீங்க, நீங்க கடவுள் மாதிரி,......... போன்ற வசனங்களை கேட்டதன் தாக்கத்தால், இந்த கேள்வி என்னுள் உருவாகி இருக்கலாம்.

ஏன் சேர்க்கவில்லை என்பதைவிட, சேர்க்காமல் விட்டதே நல்லது என்று நினைக்கிறேன். மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளையை பார்த்தால்
இவர்களை எப்படி தட்டிக்கேட்பது என்றே தெரியவில்லை.

எனது மகனுக்கு டான்சில் பிரச்சனை உள்ளது. அதை கட்டுக்குள் வைக்க மருந்தும் உண்டு வருகிறான்.ஆனால் வேறு ஒரு குறைபாட்டிற்காக ஒரு புகழ் பெற்ற சொறியன் டாக்டரின் மருத்துவமனைக்கு போனபோது,
டான்சில் பிரச்சனை மிக அதிகமாகி, காது மூக்கு தொண்டை எங்கும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டதால் உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பயம் காட்டினார்கள்.அவர்கள் காட்டிய வேகம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்களிடமிருந்து தப்பித்து வந்து, வேறு ஒரு டாக்டரிடம் சோதனை செய்தோம். அதில் அவர்கள் சொன்ன அத்தனையும் பொய் என்று நிரூபமானது.

எந்த ஒரு சின்ன பிரச்சனைக்காக டாக்டரிடம் சென்றாலும்
குந்தானி டெஸ்ட், குந்துமனி டெஸ்ட் என்று பணம் புடுங்குவதிலேயே குறியாய் உள்ளவர்களாக நம் மருத்துவர்கள் மாறி நிறைய காலம் ஆகிறது.

இப்போது , பணம் புடுங்க அவர்கள் கைக்கொள்ளும் புதிய தந்திரம், தேவையில்லாத அறுவைசிகிச்சை.

மக்களே, இந்த மருத்துவப் புடுங்கிகளிடம் உஷார்.....உஷார்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: