Friday, January 12, 2007

மூந,முக,முச.

அன்பு தமிழ் நெஞ்சங்களே, இந்தப் பதிவை ஒரு கற்பனை என நீங்கள் எடுத்துக்கொண்டால், அதில் எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால்
இதில் பொதிந்துள்ள சில வரலாற்று உண்மைகளை நீங்கள் மறுக்க
மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

முதலாவது மூந என்ற மூன்று நண்பர்களை அறிவோம்.

1. ராஜாஜி - குலக்கல்வி திட்டம் கொண்டு வர முயன்றார். ஹிந்தியும் கற்றால் தவறில்லை என்றார். ஆச்சார சீலர். கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் பகவான் ஸ்ரீராமரின் கதையை எழுதினார்.

2. திரு.வி.க - சமஸ்கிருதம், அரபி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றார். தமிழை அதைவிடச் சிறப்பாக கற்க வேண்டும் என்றார். தமிழர்கள் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும் என விரும்பினார். சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற காவியங்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றார். பெண்மையை சிறப்பித்தார். அறநெறி தவறாது வாழ்ந்தார்.

3. ஈ.வெ.ரா.- தமிழை பழித்தார். நீ தமிழன் அல்ல திராவிடன் என பிரிவினைவாதத்தை விதைத்தார். பெண்களுக்கு கற்பு அவசியமன்று என்றார். சிலப்பதிகாரம், இராமயணம் போன்ற இலக்கியங்களை பழித்தார்.
அறநெறி தவறிய வாழ்வால் நோய்கள் பல கொண்டு வாழ்ந்தார்.

இந்த மூன்று நண்பர்களும் தங்களுக்குள் இரகசியமாய் பேசி வைத்துக்கொண்டு இப்படி வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்தனரோ என நினைக்க தோன்றுகிறது.

ஆனால் ஈ.வே.ரா-க்கு தன் நிலைப்பாடு எத்தகைய அபாயம் நிறைந்தது என்பது புரிந்தே இருந்திருக்கவேண்டும். அதனால் இந்த கட்சி தி.க தன்னோடே அழிந்து போகவேண்டும் என அவர் விரும்பினார்.

அதனால்தான் அவர் காலத்திலேயே முன்னேற்ற கழகங்கள் (முக)
முளைத்தனவோ என்னவோ?.

ஆனால் தமிழர்கள் ஜனத்தொகையில் அரை சதமே உள்ள கொலைவெறி பிடித்த, சில நாத்திக திருடர்கள், சில சுயலாபங்களுக்காக விடாமல் கருப்பை
பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.

ஈ.வே.ரா தன் காலத்தில் நிலைப்படுத்திய ஆனவத்தின் அடையாளமான கறுப்பு சிந்தனைகள், தமிழர்களை பிரிவினைவாதம், தீவிரவாதம், நாத்திகவாதம் என்ற முச்சந்தியில்தான் (முச) நிறுத்தியிருக்கிறது.

இருட்டான இந்த கறுப்பு முச்சந்தியில் இருந்து வெளியேற தமிழ் பேசும் சமூகம் கைக்கொள்ளவேண்டியது இருட்டை விரட்டும், ஞானவெளிச்சத்தை பரப்பும், அரோக்கியம் தரும்
ஆத்திகம் என்னும் மஞ்சள் ஒளி.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

1 comment:

Anonymous said...

நாத்திகர்கள் சொல்வதுபோல் காசுகொடுத்து பெரியார் சிலை வாங்கி உடைக்கலாம் அல்லது காசு கொடுத்து பெரியார் படம் வாங்கி கொளுத்தலாம்.
ரண்டக்க ரண்டக்க.