Friday, January 12, 2007

இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா?.

ஒரு முன் அறிவிப்பு. இது குழலியோட கதைக்கு பதில் கதையாக இருந்தாலும் என்னோட சொந்தக் கதை.

பாண்டிச்சேரி.

முரளி என்ன இது? இப்படி அடம் பன்ற?. இன்னிக்கு நாடு உள்ள நிலைமைய புரிஞ்சிக்கோ. கிடைக்காதுன்னு தெரிஞ்சுப் போனதக்கப்பறம் உன்னை வருத்திக்கிறதுல என்ன லாபம்?.மறந்துடு நடந்தது அத்தனையும் மறந்துடு.

டேய் எப்படிடா மறக்க முடியும். நான் அவள எவ்வளவு காதலிச்சன்னு
உங்களுக்கும் தெரியும்தானடா?. லவ் லெட்டர எங்க... எப்படி? குடுக்கலாம்னு ஐடியாவெல்லாம் குடுத்திங்களேடா?.

ஒற்றைப் பார்வையில் மனம் பறித்தாய்; தலை தாழ்ந்தேன்,
மற்றோர் பார்வைக்கு உயிர் தாங்காது.
வற்றல் பார்வைகள் பல உண்டு ஊரினிலே;
வற்றாத புன்னகையை கண்டுகொண்டேன்;உன் கண்களிலே,
காதல் கொண்டேன்.
இந்த கவிதையை படித்த நண்பர்கள் குழு,
மச்சான் இதையே எழுதி குடுடா. நிச்சயம் உம் மனச நிச்சயமா அவ
புரிஞ்சுப்பாடா என்றும் உசுப்பேற்றியிருந்தது.

என் இதயம் கவர்ந்த அந்தக் கள்ளி, அலுவலகத்தில் என் கூடவே வேலை செய்பவள்தான். நாங்கள் இருவருமே இஞ்சினியர்கள். அவள் R&D துறையில் ENGINEER, நான் SERVICE ENGINEER. எனக்கு அலுவல் விஷயமாக ஊர் உலகமெல்லாம் சுற்றி வரும் வேலை. அலுவலகம் வருவதே மாசம் ஒரு வாரம் அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு வாரம். அப்படி ஒரு நீண்ட
வட இந்திய பயனத்தை முடித்துவிட்டு திரும்பிய ஒரு நாளில், லஞ்ச் டேபிலில் என் தேவதையைக் கண்டேன்.

கண்டதும் காதல்; காதல் கொண்டதும் கவிதை.
நிலவின் கருப்பு; அவள் முகத்து மச்சம்; இரண்டுமே அழகுதான்.

அம்மா வானத்து நிலா காட்டி சோறு ஊட்டியிருக்கிறாள் ஆனால்
பூமியில் உலவிய என் நிலா எனக்கு சோறு உன்ன வேண்டும் என்பதையே மறக்கடித்தாள்.

SERVICE ENGINEER க்கு எல்லாம் எங்கள் அலுவலகத்தில் நேர ஒழுங்கு கிடையாது...... அவங்கள விட்ருங்கப்பா, மாசத்துக்கு ஒரு வாரம்தான் ஆபிஸ் வரானுங்க, எதையும் கண்டுக்காதீங்க என்று ஒரு உத்தரவே இருந்தது எங்கள் அலுவலகத்தில்........ அடுத்த பிராயனத்துக்கான ஆயத்தங்களை முடித்த பின், புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன் நான்.கனையாழி, புதிய ஜனனாயகம், ரீடர்ஸ் டைஜஸ்ட், மற்றும் எனது துறை சார்ந்த புத்தகங்களால் எனது அலுவலக டேபில் நிறைந்திருக்கும்.
எனது தேவதையின் கைப்படும் பாக்கியத்தையும் எனது புத்தகங்கள்
பெற்றன.

அவள் குடித்துவிட்டு மிச்சம் வைத்துவிட்டு சென்ற மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து திருட்டுத்தனமாக அனைத்துக்கொண்டிருந்த நாளில் எனது காதல் அலுவலக நண்பர்களிடம் குட்டுப்பட்டது.

ஐயரே, பொண்ணு வெள்ளையா இருக்குன்ன உடனே உங்க ஆளா இருக்கும்னு நினைச்சிட்டியா. அடக்கமா இரு மகனே இல்லன்னா அடி படுவ. அவங்கள்ளாம் அருவா, பெட்ரோல் குண்டு, உருட்டு கட்டன்னு
சுத்தர பார்ட்டி ஆளுங்க.. என்ற நண்பர்களிடம், தெரியும் போங்கடா, எறா, புறா, சுறா எல்லாத்தையுமே என் ஆளு முழுங்கும்போதே அத தெரிஞ்சிக்கிட்டேன் என்றேன். கூடவே ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் அவளுடைய பெரியப்பா மகள் கலைச்செல்விஅக்கா திருமணம் செய்து, அவர்கள் வீட்டு அத்திம்பேர் ஆனது ஒரு ஐயர்தான் என்பது மேலும் நம்பிக்கை தந்திருந்தது.

நாட்கள் நகர்ந்தது, அவளும் என்னிடம் காதல் கொண்டிருக்கிறாள் என மனம் உணர ஆரம்பித்தது.ஆனால் யாரோ ஒருவர் முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டுமே.

காதல் உச்சத்தில் இருந்த, நாளும் கோளும் நல்ல நிலையில் இருந்த ஒரு நன்நாளில் எனது காதல் கடிதத்தை அவளது கைப்பையில் வைத்துவிட்டு (ஒரு வேளை என்னை காதலிக்கவில்லை என்று முகத்துக்கு நேராகவே
சொல்லிவிட்டால் அதை தாங்கமுடியாது என்பதால்) மறு நாள் அவளின் பதிலுக்காகவும், வருகைக்காகவும் படபடப்பாக காத்திருந்தேன்.

அதன் பிறகு, வெகு நாள்வரை அவளை பார்க்கவே முடியவில்லை.
அடக்கம் உனது இயல்பாய் இருந்தது,
அன்பு உனது ஆடையாய் இருந்தது,
புன்னகை உனது அணிகலனாய் இருந்தது,
அறிவு உனது பேச்சாய் இருந்தது.
மனம் மட்டும் வெறும் கல்லாய் இருந்ததோ?
என்று காதல் பித்துகொண்டு
அலைந்து தவித்தேன். முடிவாக அவளைத் தேடி அவளின் சொந்த
ஊரான திண்டிவனத்திற்கு சென்றேன்.

என்னை யார் என்றே தெரியாது என்றாள்...... செத்தாலும் ஒரு முடிவு தெரியாமல் நகருவதில்லை என்று பிடிவாதமாக நான் அவள் வீட்டை விட்டு நகராமல் நின்றதும், அவள் தந்தை வரும் முன் அங்கிருந்து போய்விடுமாறு கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு
கேட்டுக்கொண்டாள். அவள் கண்ணீர் என்னை அங்கிருந்து நகர வைத்தது.

அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் என்னைச் சந்தித்து பேசினார். முரளி அவங்க அப்பா திண்டிவனத்துல வலுவா இருக்கிற ஒரு பார்ட்டில முக்கியமான ஆளு,
அவரு லாயரும் கூட...... உனக்கே தெரியும்... ஜாதி இல்ல இல்லன்னு ஒப்பாரி வப்பாங்க ஆனா அந்த கட்சியே ஒரு குறிப்பிட்ட சாதிக்கோசரமே உருவான கட்சி.

கட்சி உருவான ஆரம்ப நாட்களில், குச்சி கொளுத்தறதுங்கற பேர்ல எத்தன தலித்து குடிசங்கள கொளுத்துனாங்கன்னு ஊருக்கே தெரியும்.
இப்ப தலித்துங்க ஒரு வலுவான ஓட்டு வங்கியா மாறிட்டதால அண்ணன் தம்பி ஆகிட்டாங்க. ஆனா மாமன் மச்சானா என்னிக்குமே மாற மாட்டாங்க.பலமான ஓட்டு வங்கியா இருக்கிற தலித்துங்களுக்கே இந்த நிலமைன்னா ? ஓட்டு வங்கியா இல்லாத ஐயருங்கல்லாம் அவங்க வீட்டு மாப்பள்ளையா ஆகனும்னு நினைச்சா!! அது முடியுற காரியமா?? யோசிச்சுப் பாரு.

அப்பறம் அந்தப்புள்ள உன்கிட்ட சொல்ல சொல்லிச்சு. நீ அது மேல அன்பு வச்சது நிசம்னா, நீ நல்லாயிருக்க அப்படிங்கரத, அந்த புள்ள, அதோட வாழ்க்கை முழுக்க கேட்டுகிட்டே இருக்கர மாதிரி உன்ன வாழ்ந்து காட்ட சொல்லிச்சு. இந்த வார்த்தைய அது மேல சத்தியம்பன்னி சொல்ல சொல்லிச்சு.

நான் ஏன் இத்தனை சொல்றேன்னு நீ நினைக்கலாம். பொண்ணு வேற
சாதியில, அதுவும் ஒரு பார்ப்பான கல்யாணம் பன்னிக்கிச்சுன்னா
தன்னோட கட்சியில தனக்கு மரியாத போயிடும்னு நினைச்சு அவங்க அப்பா சொந்தத்துல ஒரு பையனுக்கு நேத்து காலையிலேயே
கல்யாணம் முடிச்சிட்டார்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.




1 comment:

Anonymous said...

murali
well done.
you are a sucessfull man now.
taken care of that girls word.

leave about PMK peoples they are worthless peoples