Thursday, July 27, 2006

என்னை பாதித்த மஹான்கள் - சீரடி சாய்பாபா

அன்பர்களே நண்பர்களே,
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்று ஒரு பழமொழி போல் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் இறை உணர்வும் இந்த வரையரைக்குள் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

அவரவர் இறை நம்பிக்கை அவரவர் சொந்த அனுபவத்தின் மீதுதான் வலுப்பெறும் என நினைக்கிறேன். வம்படியாக தானாகவே வலியவந்து என் வாழ்வில் புகுந்து சில அதிசய அனுபவங்களை விட்டுச் சென்றவர் சீரடி சாய்பாபா அவர்கள்.

எனக்கு சீரடியாரைப்பற்றி ஏதும் தெரியாத ஒரு கால கட்டத்தில், கடல் கடந்து வேலைக்கு செல்ல வேண்டுமா என என்னுள் ஒரு குழப்பம் நிலவிய மன நிலையில் ஒரு கனவு வந்தது. நான் ஒரு மலைகள் சூழ்ந்த பகுதியில் வழி தடுமாறி குழம்பி நிற்பதும், அங்கே வரும் பாபா எனக்கு
சரியான பயணத் திசையை காட்டுவதுமாக இருந்தது அக்கனா.

சரிதான், பாபாவே கை காட்டிய பிறகு வேறென்ன வேண்டும் என கிளம்பி ஜெத்தா வந்தால், நான் கனவுல பார்த்ததும்; பாபா கை காட்டியதுமான
ஊர் ஜெத்தாதான். நினைத்துப் பாருங்கள் எனக்கு எப்படி இருந்திருக்கும்.

அப்பறம் நான் பாம்பே போயிருந்தபோது அங்கிருந்து சீரடிக்கு சென்று பாபாவின் சமாதி+கோவிலை தரிசித்து வந்தேன். அங்கு ஒரு அதிசயமான விஷயம் சொன்னார்கள். சீரடி சாயிபாபா இந்துவா / முஸ்லீமா
என்று குழப்பமாகவே இருந்ததாம். அதனால் அவர் உயிர் நீத்த பின் ஒரு சாரார் உடலை புதைக்க வேண்டும் என்றும்/ ஒரு சாரார் உடலை எரிக்க வேண்டும் எனவும் வலியுருத்தினார்களாம்.

அவர் உடலை மூடியிருந்த துணியை அகற்றினால்; உடல் பூக்களாக மாறிப் போயிருந்ததாம். தான் பூவாக மாறி இந்து/முஸ்லீம் உள்ளங்களில் அன்பு மலரச் செய்தவர்.

ஓம் சாய் நமோ நமோ; ஷ்ரீ சாய் நமோ நமோ
ஜெய ஜெய சாய் நமோ நமோ; சத்குரு சாய் நமோ நமோ.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: