Thursday, July 20, 2006

என்னை பாதித்த மஹான்கள்-ஓஷோ

லெபனானில், குண்டு வீச்சில் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் பலி. படித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது. எந்த நரைத்த முடியினரின் ஊன்றுகோல் உடைந்ததோ. யார் குங்குமத்தை தொலைத்தாரோ! எந்த குழந்தைகள் நல்லாசிரியரை இழந்தனரோ! எந்த முதிர் கன்னி நம்பிக்கையை இழந்தாளோ! எண்ணிலாக் கேள்விகள் என்னுள்ளே.

எண்ணை வளம் கொழிக்கும் இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர் வர்கத்தினரே. மேலே குறிப்பிட்ட குடும்பத்தோரின் நலன்களுக்காக தங்கள் சுகவாழ்வை அடமானம் வைத்தவர்கள். டாலர் தேச வெள்ளை சட்டைப்பட்டை தொழிலாளர்களுக்கும் இவர்களுக்கும் வசதியிலும், வாழும் முறையிலும் உள்ள வித்தியாசம் பசுமைக்கும் பாலைக்கும் உள்ள வித்தியாசம்.

இங்கு வேலைக்கு வந்த புதிதில் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பித்
தள்ளுவதுண்டு.

பாய் எப்படி பாய் இத்தனை நாள் தாக்குப் புடிச்சிங்க? நான் இந்த முறை ஊருக்குப் போய் அங்கேயே உட்காந்துரலாம்னு இருக்கேன்.

முரளி நாங்களும் வந்த புதுசுல இப்படியெல்லாம் யோசிச்சவங்கதான் எல்லாம் கொஞ்சம் நாளானா சரியாயிடும் என்ற ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும்.

பல பேர் குடும்ப நலன்களுக்காக பெற்றோரின் அன்பையும், மனைவியின் அன்மையையும், குழந்தைகளின் அந்நியோன்யத்தையும் தியாகம் செய்தவர்கள்தான். ஒரு அஞ்சு வருசம் இருந்துட்டு போயிடலாம் என்று வந்துவிட்டு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதர்க்காக கால நீட்டிப்பு செய்துகொண்டே போகிறவர்கள்தான்.

சந்ததினையினரின் சாதனைக் கனவுகளுக்காக, தங்களின் வாழ்க்கைப் பயனத்தை பாலைவனத்தில் தொடர்ந்த சாதனையாளர்களின் மரணத்ததிற்கு
எனது அஞ்சலிகள்.

இதுல ஓஷோ எங்கேயிருந்து வந்தார் என தேடுபவர்களுக்கு; ஒரு பாலைவனத் தொழிலாளியான நான் எனது மகனை தாய் நாட்டில் விட்டு தனியே திரும்பிய பொழுது ஏற்பட்ட உணர்ச்சிகளை பதிய ஒரு தனி பதிவு போட வேண்டும். எனது மகன் பெயர் ஓஷோ.

ஓஷோவின் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் என் மனதில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியதால் என் மகன் பெயர் ஓஷோவானது. ஓஷோ என்ற பதத்திற்க்கு அழகான பொருளும் உண்டு.
வானத்தால் ( இறையால்) பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்டவர் மற்றும் இறைத்தன்மையில் கரைந்தவர். கூடவே ஒரு செய்தி எனது மகனுக்கு இன்று பிறந்த நாள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: