Saturday, April 21, 2007

மீண்டும் பூணூல் அறுப்பு.

என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல?. மீண்டும் பெரியார் சிலை சேதம், மீண்டும் பிராமணர்களின் பூணூல் அறுப்பு. தென்ன மரத்துல தேள் கொட்டினா, பன மரத்துல நெறி கட்டிச்சாங்கர மாதிரி, எவனோ பெரியார் சிலைய சேதம் பன்னா, பிராமணர்களின் பூணூல அறுக்க கிளம்பிடுராங்க.

ஒரு வலைப்பதிவர், பூணூல் அறுக்கப் படும்தான்-னு, மிரட்டல் வேற விட்டுருக்கார். அண்ணா உங்கள மாதிரி ஆளுங்கள நாங்க இன்னிக்கி புதுசா பாக்குரமா என்ன? நாப்பது வருஷமா தமிழ்நாட்டுல நடந்துகிட்டுத்தான இருக்கு.பழைய கள்ளு; புதிய மொந்தை.

நீங்க எத்தன முறை குடுமி அறுத்தாலும், மசுருதான, போனா போதுன்னு
திரும்பி குடுமி வெச்சுப்போம். எத்தன முறை பூணூல் அறுத்தாலும், திருப்பி மாட்டிப்போம். என்ன செஞ்சாலும் அசர மாட்டேங்கரானே பார்ப்பான்னு வெம்பி சாவுங்க.

அப்பறம், இதுல யோசிக்கரதுக்கு வேற விஷயமும் இருக்கு. இந்த சிலைய சேதம் பன்ற விஷமிகளோட உள் நோக்கம் என்ன? யார் செய்யறான்னு கண்டுபிடிச்சு மொத்தமா எல்லாரையும் தூக்கி
உள்ள போடனும். அப்பத்தான் இந்த பிரச்சனை தொடராம தடுக்க முடியும்.

மேலும், தென் மாவட்டங்களில், சில வருடங்களுக்கு முன்னாடி நடந்த, ஜாதிக் கலவரங்களுக்கு காரணமாக இருந்த, தேவர், அம்பேத்கார் சிலை
உடைப்பு சமயத்தில், அங்கு இருந்த போலீஸ் அதிகாரி ஜாங்கிட் ஒரு உபாயம் செய்தார். சிலைகளுக்கு கூண்டு வலை அமைத்து, பூட்டி, அதன்
சாவியை உள்ளூர் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்திருந்தார். அதுபோல்
பெரியார் சிலைகளுக்கும் கூண்டு அமைப்பது. இப்பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

ஏனென்றால் இந்த சிலை உடைப்பு விஷயத்தில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற தேச விரோத,
தமிழக விரோத சக்திகளின் செயலாகக் கூட இருக்கலாம்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: