Tuesday, April 24, 2007

ஏன் தடை செய்யக் கூடாது தி.க-வை?.

நெய்வேலியில் பிராமணர்களின் பூணூல், குடுமி அறுக்கப் பட்டுள்ளது.
இதில் ஈடுபட்டவர்கள் தி.க வை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப் படுகிறது. தொடர்ந்து பிராமணர்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை கைக்கொள்ளும் தி.க வை
ஏன் தடை செய்யக் கூடாது? .

துரதிஷ்டவசமாக எந்த அரசியல் தலைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து கடுமையான அறிக்கை வெளியிடுவதில்லை.
சாது ஜீவிகளான பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கமும் முன்வருவதில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட வேலுடையான்பட்டு கோவில், எனது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும்,
இறைவனைப் பற்றியும், இந்த கோவில் சார்ந்த எனது அனுபவங்களையும், ஒரு தனி பதிவாக எழுதுவேன்.

நெய்வேலியில் தி.க வின் தொந்தரவு ரொம்பவும் அதிகம். இங்கு தி.கவினர், வாரியார் சுவாமிகளுக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததையும் எனது முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

நெய்வேலியில் ஒரு காலத்தில் எல்லாச் சுவர்களிலும் தி.க வினர் பிராமணர்களை தூற்றி, வன்முறை வசனங்களை எழுதி இருப்பார்கள்.
கோவிலுக்கு மிக அருகில் மைக் கட்டி, கூட்டம் போட்டு இறைவனை
கேலி பேசிக் கொண்டிருப்பார்கள். நான் சிறுவனாய் இருந்த பொழுது
இதை எல்லாம் கண்டு, கேட்டு மிகவும் மனம் வெதும்பியிருக்கிறேன்.

அரசியல் லாபங்களுக்காக ஒரு அமைதியான, ஒழுக்கமான சமூகத்தை,
பொய்ப் பிரச்சாரங்களின் மூலம், தமிழகத்தில் பொது எதிரி போல ஆக்கி
விட்டார்கள். ஒரு எழுத்தாளர் முன்பு வேதனைப்பட்டு எழுதியது இக்கனத்தில் ஞாபகம் வருகிறது.

தமிழகத்தில், பிராமணர்கள், யூதர்கள் போல நடத்தப் படுகிறார்கள்.
இது நூறு சதம் நிஜம் என்று இது போல சம்பவங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன.

பிராமண துவேஷிகள், பிராமண எதிர்ப்பு என்னும், நிகழ்காலத்திற்கு ஒவ்வாத, அர்த்தமில்லாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தயவு செய்து தூக்கி எறியுங்கள் பிராமண எதிர்ப்பு என்னும் துருப் பிடித்த வாளை.

தமிழகத்தின் பிரச்சனைகளான ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, தண்ணீர் பஞ்சம், பிரிவினைவாதம், தீவிரவாதம், இன வெறி, மொழி வெறி,அரசியல்
அதிகாரவர்கத்தின் பித்தலாட்டம், ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை
போன்றவற்றிற்கும், பிராமணர்களுக்கும் துளியாவது சம்பந்தம் உண்டா?
மன சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்.

எனது தனிப்பட்ட வாழ்வில் இதே போல் ஒரு தி.க வினரின் தாக்குதலை ஒரு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் நான் எதிர் கொண்டுள்ளேன். ஆனால் அன்று தி.கவினர் எங்களிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். எனது அத்தனை ஆத்திரங்களையும் அன்று அவர்களை புரட்டி அடித்து தீர்த்துக் கொண்டேன்.

நல்லதுக்கு தமிழகத்தில் காலமில்லையோ என்று தோன்றுகிறது.
பிராமணர்களுக்கு இன்றைய, எதிர்கால தேவை; தங்களை தற்காத்துக்கொள்ள, பரசு ராமனின் ஆவேசத்தை முன் மாதிரியாகக்
கொண்ட ஒரு போர்ப்படையா?
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.




Saturday, April 21, 2007

மீண்டும் பூணூல் அறுப்பு.

என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல?. மீண்டும் பெரியார் சிலை சேதம், மீண்டும் பிராமணர்களின் பூணூல் அறுப்பு. தென்ன மரத்துல தேள் கொட்டினா, பன மரத்துல நெறி கட்டிச்சாங்கர மாதிரி, எவனோ பெரியார் சிலைய சேதம் பன்னா, பிராமணர்களின் பூணூல அறுக்க கிளம்பிடுராங்க.

ஒரு வலைப்பதிவர், பூணூல் அறுக்கப் படும்தான்-னு, மிரட்டல் வேற விட்டுருக்கார். அண்ணா உங்கள மாதிரி ஆளுங்கள நாங்க இன்னிக்கி புதுசா பாக்குரமா என்ன? நாப்பது வருஷமா தமிழ்நாட்டுல நடந்துகிட்டுத்தான இருக்கு.பழைய கள்ளு; புதிய மொந்தை.

நீங்க எத்தன முறை குடுமி அறுத்தாலும், மசுருதான, போனா போதுன்னு
திரும்பி குடுமி வெச்சுப்போம். எத்தன முறை பூணூல் அறுத்தாலும், திருப்பி மாட்டிப்போம். என்ன செஞ்சாலும் அசர மாட்டேங்கரானே பார்ப்பான்னு வெம்பி சாவுங்க.

அப்பறம், இதுல யோசிக்கரதுக்கு வேற விஷயமும் இருக்கு. இந்த சிலைய சேதம் பன்ற விஷமிகளோட உள் நோக்கம் என்ன? யார் செய்யறான்னு கண்டுபிடிச்சு மொத்தமா எல்லாரையும் தூக்கி
உள்ள போடனும். அப்பத்தான் இந்த பிரச்சனை தொடராம தடுக்க முடியும்.

மேலும், தென் மாவட்டங்களில், சில வருடங்களுக்கு முன்னாடி நடந்த, ஜாதிக் கலவரங்களுக்கு காரணமாக இருந்த, தேவர், அம்பேத்கார் சிலை
உடைப்பு சமயத்தில், அங்கு இருந்த போலீஸ் அதிகாரி ஜாங்கிட் ஒரு உபாயம் செய்தார். சிலைகளுக்கு கூண்டு வலை அமைத்து, பூட்டி, அதன்
சாவியை உள்ளூர் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்திருந்தார். அதுபோல்
பெரியார் சிலைகளுக்கும் கூண்டு அமைப்பது. இப்பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

ஏனென்றால் இந்த சிலை உடைப்பு விஷயத்தில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற தேச விரோத,
தமிழக விரோத சக்திகளின் செயலாகக் கூட இருக்கலாம்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.