Monday, October 08, 2007

ராமரும் நானும்.

இறைவனை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்வார்கள். அது முற்றிலும் சரியென்றே தோன்றுகிறது.
ராமரைப் பற்றிய விமர்சனமும், அதை தொடர்ந்த விவாதங்களும்,
நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை மறந்துபோகும் அளவுக்கு
மக்களை திசை திருப்பியிருக்கிறதே. அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள்
நிம்மதியாக இருக்கலாம்.

ராமன் கற்பனையான புராண பாத்திரமா? பூமியில் வாழ்ந்த இறையின் அவதாரமா? ஆரியனா? ஆதாரம் உள்ளதா? என்றெல்லாம் நிறைய விவாதங்கள். ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய பதிவுகள் வந்துகொண்டே
இருக்கின்றன.

போற போக்குல ஒரு கல்ல வுட்டு அடிப்போம், வுளுந்தா மாங்கா லாபம், இல்லன்னா கல்லுதான நஷ்டம் என்ற மனோபாவத்தோடு பெரியார் பக்தர்கள் மனசுல பட்டதையெல்லாம் கேள்விகளாக வீசி அடிக்கிறார்கள்.

ராம பக்தர்கள் பெரிய முயற்சி செய்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயனம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் மேற்கோள் காட்டி பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு, சும்மா எதுத்து எதையாவது ஒன்ன சொல்லி வைப்போம்னு நினைக்க முடியல்ல. ஆதரிச்சு எதையாவது
சொல்வோம்னா , மேல் மாடி காலி. அதனால குறைந்தபட்சம் இராமர் சம்பந்தமாக எனது அனுபவங்களை ஒரு பதிவா போடலாம்னு
முடிவு செஞ்சுட்டேன்.

அநேகமாக ராமர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது ஒரு சீதாகல்யாண நிகழ்ச்சியில் என்று நினைக்கிறேன். இறைவனுக்கே
திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யாருக்கு தோன்றியதோ
தெரியவில்லை. ஆனால், இந்த சீதா கல்யாணம், ராதா கல்யாணம் எல்லாம் வந்து விட்டால் குழந்தைகளான எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

பஜனை, பாட்டு, ஆட்டம், மாறு வேடம், கல்யாண சாப்பாடு என ஒரே
சந்தோஷம்தான். இந்த அனுபவம் முதல் முறையாக கிடைத்தது மூன்றிலிருந்து , நான்கு வயது இருக்கும்பொழுது.

மீதி அனுபவங்கள் அடுத்த வரும் பதிவுகளில்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.