Sunday, September 23, 2007

ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.

இன்று தி.மு.க டாக்டர் கலைஞரின் தலைமையில் ஒரு விசித்திரமான சூழ் நிலையை எட்டியிருக்கிறது. உதய சூரியன் அஸ்தமன சூரியன் ஆகி விடும் நேரம் மிக அருகில் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

முதலில் இந்த டாக்டர் பட்டத்தை பார்ப்போம். இந்த டாக்டர் பட்டத்தை எதிர்த்த கல்லூரி மாணவர்களில் ஒருவரான சிட்டிபாபு உலகத்தை விட்டே ஓடினார். அந்த நேரத்தில் பாலத்தில் குண்டு வைக்க முயண்று கைதாகிய ஒரு மாணவர் பிறகு அனு விஞ்ஞானி ஆகி அமேரிக்காவிற்கு ஓடினார். அங்கு புலி ஆதரவாளராக செயல்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்குள் ஓடினார்.

கருணாநிதியே, நிதிக்கான கணக்கு என்ன ஆயிற்று எனக் கேட்டதால் எம்.ஜி.ஆர் தி.மு.க-வை விட்டே ஓடினார்.அவரோடு நாவலர்
நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் எல்லாம் கழகத்தை விட்டு
ஓடினர். இந்த நேரத்தில் இராமன் பதினாலு ஆண்டுகள் வனவாசம் செய்தது போல கலைஞரும் தனது அரியனையை விட்டு ஓடினார்.

வை.கோ மீது கொலைப்பழி சுமத்தப் பட்டதால் அவரும் தனிக் கட்சி கண்டு ஓடினார்.

தயாநிதி, கலாநிதி மாறன்கள் தலை தெறிக்க ஓடினர்.

சரத் குமார் சமத்துவ ஜனநாயக முன்னனி கண்டு ஓடினார்.

இவர்கள் அத்தனை பேரையும் ஓட விட்டு மகிழ்ந்த கலைஞர். முக்கியமான
ஒருவன் ஓடுவதை கவனிக்க தவறி விட்டார்.

அவன்தான் தமிழன்.

இந்த கேடு கெட்ட அரசியலால் தமிழகம் எந்த முன்னேற்றமும் அடையாததால், வாழ்வாதாரம் இழந்த தமிழன், ஆந்திராவுக்கும், கேரளத்திற்கும், கர்நாடாகாவிற்கும்,
மும்பைக்கும், டில்லிக்கும், கொத்தடிமைகளாக, கூலி வேலை செய்யவும்
ஓடினான். மற்றும் உலகமெல்லாம் வேலை தேடி ஓடினான்.

தமிழக மக்கள் நலம் பேன, தன்னைப் பற்றி உண்மையாக கவலைப்பட ஒரு தகுதியான தலைவர் கிடைப்பாரா? என்று தேடி தமிழன் ஓடினான், ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.

ஓடிக்கொண்டே இருப்பான்.

அட ராமா இன்னும் எத்தனைக் காலம் ஓட வேண்டுமோ?
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.