Monday, July 17, 2006

என்னை பாதித்த மஹான்கள்

அன்பர்களே நண்பர்களே,
இந்த நிலை இல்லா வாழ்க்கையில் உழன்று, மாண்டு பிறறால் மறக்கப்பட்டவர்கள் ஏராளம். விஞ்ஞாநிகள், புவி ஆண்ட மன்னவர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கவிகள், கலைஞர்கள், சீர்திருத்தவாதிகள், பெரும் போராளிகள், சாதனையாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற முத்திரைகளை பதித்து, மாண்டு பிறறால் மறக்க முடியாதவர்களும் ஏராளம்.
வலிந்து அதிகார வர்கத்தால் மறக்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம் ( உதாரனம் தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள்). ஆனால் வாழ்ந்த காலத்தில் அன்பாய் மலர்ந்து, அன்பின் மணத்தைப் பரப்பி, சமூகத்தை மலர்ச்சியாக வைத்திருந்து, இப்பொழுதும் வாழ்கிறார்கள் என மானிடர்களால் நம்பப்படும் மாமுனிகள் எப்பொழுதும் எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்திருக்கிறார்கள்.

அதுவும் நமது இந்திய சமூகத்தில் ( எதுக்கு வம்பு, திராவிட சமூகத்தில் கூட) இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் மிக அதிகம். அதனால்தான் நமது தேசத்தை புண்ணிய தேசம் என்று அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். இத்தகையப் பெரியோர்கள் இந்து இஸ்லாமிய கிருஸ்துவ சீக்கிய பார்சி புத்த ஜைன( பாத்தீங்களா பாத்தீங்களா ஒரு கமா கூட நம்மை பிரிப்பதை நான் விரும்பவிலை) மதங்களின் பின்னனியில் வந்திருந்தாலும், அவர்களின் மதப் பின்னனி புறந்தள்ளப்பட்டு மாந்தர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

இவர்களில் நான் உணர்ந்த சிலரைப்பற்றி இனி வரும் நாட்களில் பதிவு செய்வேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: